சூர்யாவுடன் இணைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Etharkum Thuninthavan Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெற்றியை விரட்டிப் பிடித்த ‘கெத்து’ : நம்ம சிந்துவை முந்த முடியுமா..?

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.‌. எதற்கும் துணிந்தவன் படத்தின் காத்திருக்கும் டபுள் ட்ரீட்.!!

பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இசையமைத்துள்ளார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்த தானம் செய்த Arun Vijay – குவியும் பாராட்டு | HD

இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னதாக பாண்டியராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் ஒரு பாடலை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.