März 28, 2024

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா வெளியிட்ட தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா வெளியிட்ட தகவல்

என்னைக் கொல்ல முற்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் துளியும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், மாறாக அவரது மரணம் தொடர்பான செய்தி கேட்டு பரிதாபம் தான் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை.

அவர் என்னை எத்தனையோ தடவை கொலைசெய்ய முற்பட்டவர். என்னுடன் இருந்தவர்களை கொன்றவர். என்னுடன் இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவர், கடத்தியவர்.