März 28, 2024

தலைவரின் பிறந்த நாளிலும் பயம்!

வடக்கில் மாவீரர் தினத்திற்கு தடை பெறப்பட கிழக்கில் எதிர்வரும் நவம்பர் 26 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் விழாவை அனுஸ்டிப்பதற்கும் தடை பெறப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தில் 20 ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர வேண்டாம் என கொக்கட்டிச்சோலை பொலிஷாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியால் தடை உத்தரவு கட்டளையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு அவரின் அம்பிளாந்துறை இல்லத்தில் சென்று கையளித்தனர்.

இந்த தடை உத்தரவில் தவிசாளர் சீ.புஸ்பலிங்கம்,பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணாக்கியன், கோ.கருணாகரம், தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் த.சுரேஸ் ,முன்னாள் போராளிகளான நடராசா சுரேஸ், தம்பித்துரை கஜேந்திரன் ஆகிய ஏழு பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.