März 28, 2024

கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம்:இந்திய துணைதூதர் திறப்பு

 

முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் சகிதம் கார்த்திகை மாத மரநடுகை மற்றும் கண்காட்சியை கிட்டு பூங்காவில் ஆரம்பித்துள்ளார்.

மாவீரர் வாரத்தில் விடுதலைப்போராட்ட காலத்தில் மாவீரர்கள் நினைவாக மரம் நடுகை முன்னெடுக்கப்படுவது வழமை.

இதனை பின்பற்றி தனது முன்னாhள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மரநடுகையினை முன்னெடுத்துவருகின்றார்.

அவ்வகையில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கார்த்திகை வாசம் மலர் முற்றம் எனும் மரக்கன்று கண்காட்சியை நல்லூரிலுள்ள கிட்டு பூங்காவில் இன்று யாழிலுள்ள இந்திய தூதர் சகிதம் திறந்து வைத்துள்ளார் பொ.ஜங்கரநேசன்.