April 20, 2024

நினைவகூரலைத் தடுத்தால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால்  எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டது,போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு  கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம்  தடுக்கின்றது.

இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.