April 24, 2024

லண்டனில் தீ விபத்து; யாழ் ஒரே குடும்பத்தை சேர்த்த குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாப மரணம்!!

லண்டனில் உள்ள வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கு ழந்தைகள் உயிரிழந்தனர்.

pic by yarloli
pic by yarloli

மேலும் தகவல் தெரியவருகையில் வியாழக்கிழமை இரவு லண்டனில்  பெக்ஸ்லிஹீத்தில் உள்ள ஹாமில்டன் சாலையில் உள்ள வீட்டில் இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது .

இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த திருகோணமலை மற்றும் லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட நாகரஜனி வசந்தராஜா மற்றும் அவரது மகள், இரண்டு பேரப்பிள்ளைகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும்

pic by yarloli

சுவாசக் கருவியுடன் சென்ற தீயணைப்பு வீரர்கள் 30 அடி ஏணியைப் பயன்படுத்தி முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டனர், ஆனால் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தீக்காயங்களுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறிய ஒருவர் (மைத்துனர் என கூறப்படுகிறது), லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன,

மூன்று மாதங்களுக்கு முன்புதான் வீட்டை வாங்கினார் என்றும், அவர்களுக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர் என்றும், கணவர் சம்பவத்தின் போது அவர் வேலையில் இருந்தார் என அயல் வீட்டார் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

குறித்த விபத்தில் உயிரிழந்த நாகரஜனி வசந்தராஜா என்பவர் சில நாட்களில் இலங்கை வர காத்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன,

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..