April 24, 2024

சீன கழிவுகள் நல்லதே!

இலங்கையை வந்தடைந்துள்ள சீன உரத்தில் தீங்கு எதுவும் இல்லை; மூன்றாம் நபர் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்..

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உரத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எதுவும் இல்லை என சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group உறுதி செய்துள்ளதாம்.

இலங்கையில் உள்ள தாவர தனிமைப்படுத்தல் சேவையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உர மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கை பின்னர் சீன கிங்டாவோ சீவின் பயோடெக் குழுவால் சவால் செய்யப்பட்டது, இந்த விடயத்தை மூன்றாம் தரப்பினராக ஸ்கட்டர் குளோபல் இன்ஸ்பெக்ஷன் மற்றும் சர்வே கொம்பனிக்கு (Schutter Global Inspection and Survey Company)  அனுப்ப ஒப்புக்கொண்டது.

டெய்லி மிரர் செய்தியின்படி, நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உரங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

Qingdao Seawin Biotech Group நிறுவனம் இலங்கை ஊடகங்களுடன் பகுப்பாய்வு அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. நிறுவனம் வழங்கிய மாதிரிகளில் கோலிபார்ம் பக்டீரியா, சல்மோனெல்லா மற்றும் அஸ்காரிட் முட்டைகள் போன்ற தீங்கு விளைவிக்கும்  எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஸ்கட்டரின் சோதனை அறிக்கை கூறுகிறது. இது ISO 4832-2006 இன் படி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், தாவர தனிமைப்படுத்தல் சேவையின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி W.A.R.T விக்கிரமாராச்சியிடம் இருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மேலும், இதற்காக கடன் கடிதங்களை திறந்த மக்கள் வங்கியும் சீனாவால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.