April 25, 2024

அம்பலமாகும் கோத்தா சதி!

கோத்தாபாயவை ஜனாதிபதி கதிரையேற்ற முன்னெடுக்கப்பட்ட சதிகள் தொடர்ந்துமம் அம்பலமாகியே வருகின்றது.

முன்னைய ஜனாதிபதி மைத்திரியை பலாலியில் கிளோமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதிமுதல் ஈஸ்டர் தாக்குதல் வரை அம்பலமாகிவருகின்றது.

இந்நிலையில் இராணுவ புலனாய்வின் பின்னணி பற்றிய தகவல்கள் அம்பலமாகிவருகின்ற நிலையில் அதனை மறுதலிக்க முயற்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையில்  அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிமுக்கும் இடையில் உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் சரத் வீரசேகர இன்று (11) பாராளுமன்றத்தில் நிராகரித்தார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், சஹ்ரானின் வீட்டுக்கு அரச புலனாய்வுப் பிரிவினர் செல்வில்லை என்பதுடன் அவ்வாறான குற்றச்சாட்டுகளையும் முழுமையாக மறுத்தார்.

 

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களின் வீட்டிற்கு அரச புலனாய்வுப் பிரிவினர் சென்றதாக ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹதியா குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான நாணயக்கார மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 அம்பாறை பொலிஸ், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஹாதியா வழங்கிய வாக்குமூலங்களை மேற்கோள்காட்டி, இது தொடர்பான ஆதாரங்களை காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சவால் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.