März 28, 2024

மாமனிதர் ரவிராஜ் நினைவுகூரப்பட்டார்

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று புதன்கிழமை (10) காலை, சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவுத்தூபி இடத்தில்  நகர சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில்  நடைபெற்றது.இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.