April 19, 2024

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன்

நகர நிர்வாகத்திடமிருந்து மரியாதை மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன் அவர்கள்
ஜேர்மனி டோட்முண்ட் நகரத்தில் பல ஆண்டுகளாக தமிழ்மொழி வகுப்பினையும், கலை வகுப்புகளையும் நடாத்தியதுடன் மொழிபெயர்ப்பாளராகவும் பொதுச்சேவையாளராகவும் தொண்டாற்றியவரும் பல்கலாச்சார செயல்பாட்டு மண்டபத்தின் பொறுப்பாளருமாகிய திரு.குமாரசாமி ஜெயகுமாரன் அவர்களுக்கு டோட்முண்ட நகர நிர்வாகம் மரியாதை மோதிரமளித்தும் சான்றிதழ் வழங்கியும் கௌரவித்துள்ளது.
இத்தகு மரியாதை பெறுவது என்பது இலகுவானது அன்று.நீண்டகால தொண்டாற்றலுடன் கூடிய கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் உடைய ஒருவருக்கே இத்தகு மரியாதை கிடைக்கும்.
நகர நிர்வாகம் அவரைப்பற்றி அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்தறிந்த பின்னரே இத்தகு மரியாதையைச் செய்திருக்கின்றது.
மரியாதை மோதிரத்தை பெற்றுக் கொண்ட திரு.குமாரசாமி ஜெயகுமாரன்அவர்களைபாராட்டிவாழ்த்துவதுடன்,அவருக்கான பாராட்டு விழாவினை கடந்த 31.10.21 அன்று முன்னெடுத்த டோட்முண்ட் நகரத்தில் இயங்கிவரும் தமிழ் அரங்கித்தினரையும் பாராட்டுகிறோம்.
இம்மரியாதையைக் கொடுத்த டோட்முண்ட் நகர நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.