März 28, 2024

எழுச்சியடைய சொல்கிறார் சுமா சேர்!

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என  எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கில் 196 சதுர கிலோமீட்டரை தேசிய பூங்கா எனும் பெயரில் ஆக்கிரமித்துள்ள கேவில் முள்ளியான் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக பார்த்தும் கேட்டும் அறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கேவில் பிரசே பிரதேசத்திலே காலாகாலமாக மக்கள் பயிர் செய்துவந்த காணிகளை ஜீவராசி திணைக்களத்தினர் தமது நிலங்கள் என்று சொல்லி அந்த மக்களுடைய தொழிலை பாதிக்கின்ற வண்ணமாக அந்தப் பிரதேசத்திற்கு உள்ளே உள் நுழைய கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

நெல் வயல்கள் ஏற்கனவே விதைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்குள்ளேயேயும் ஒருதரும் போகக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதைத்த காணியில் வேலியடைத்தவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறார்கள்.

இது சம்பந்தமாகவும் ஒரு சில விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்க அதிபரோடு பேச்சுவார்த்தை நடாத்தி யிருந்தோம்.

அரசாங்க அதிபர் இது சம்பந்தமாக ஏற்கனவே சில நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாக அறிவித்திருந்தார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு இந்த பிரதேசத்து விவசாயிகள் பல காலமாக இங்கே இந்த நிலங்களை விதைத்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதற்கு பதில் எதுவும் இல்லை 1976 ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் கிரமமாக இந்த பிரதேசத்திலேயே பயிர் செய்து வந்திருக்கிறார்கள்.

அதற்கான உரித்து அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே திடீரென்று வனஜீவராசிகள் திணைக்களம் வந்து

இந்தப் பிரதேசத்தில் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு விடயம் இங்கே சுத்தி பார்த்தாலே தெரியும் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது.

வனமாக இருக்கிற இடம் வனமாகவே இருக்கிறது. ஆகவே இந்த பிரதேச மக்களே இந்தச் சுற்றுச்சூழலை மிகவும் பொறுப்பாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

இங்கே வருகின்ற பறவைகள் இப்பொழுதும் இங்கே வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது.

ஆகவே திடீரென்று நாங்கள் தான் இவற்றையெல்லாம் பாதுகாக்கிறவர்கள் என்று வன ஜீவராசிகள் திணைக்களம் வந்து இந்த மக்களுடைய வயிற்றிலே அடிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதி சம்பந்தமாக அரசாங்க அதிபர் ஓடு பேசியது போல மற்றைய உயர் அதிகாரிகளோடும் நாங்கள் முதலிலே பேசுவோம்.

அப்படி அவர்கள் அதற்கும் இணங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

அதற்கு முன்பதாக ஏற்கனவே விதைத்த வயல்களிலேயாவது தொடர்ந்து அந்தப் பயிற்செய்கையை செய்வதிலே அவர்கள் எந்தவிதமான தடையும் விதிக்கக்கூடாது.

நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு கொண்டிருப்பது ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்க, சாதாரணமாக இயற்கையாகவே பயிர் செய்துவந்த பிரதேசங்களிலும் பயிர் செய்யவிடாமல் தடுப்பது என்பது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.

ஆகையினாலே இந்த பிரதேசத்திலே காலங்காலமாக பயிர் செய்து வந்தவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

இந்த பகுதிக்குள்ளே ஒரு மதுபான விறபனை நிலையமும் விருந்தினர் விடுதியும் இருக்கிறதே? மக்களுக்கு மட்டும் தான் தடை என்று கேட்டபோது……

இந்தப் பிரதேசத்தில் இல்லாமலிருந்த மக்களுடைய வாழ்வையும் அவர்களுடைய சுகாதாரத்தையும், கொடுக்கின்ற வண்ணமான புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்ற அதேவேளையிலே காலகாலமாக மக்களுடைய உணவுக்காக செய்கை செய்வதை இந்த இந்த திணைக்களம் தடுக்கிறது.