April 23, 2024

இளம் பெண் கடத்தல் – தெல்லிப்பழையில் சம்பவம்

யாழ். தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (06) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர் .

தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த  சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.