März 28, 2024

நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது !

நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளன.

அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.

அவற்றில் ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை முதல் நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் ஆகியனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை இயக்கவுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவைளை முன்னெடுப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன.