April 18, 2024

தேவாலயங்கள் மீதான தாக்குதல் பொய்யானவை!! அச்சப்படத் தேவையில்லை!!

 

இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.சில தேவாலயங்களுக்குச் சென்றிருந்த கடற்படை அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவல்கள்  சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில்   செய்தியாக வெளியாகின.

பாதுகாப்ப செயலாளர் ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால்  வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தி   உறுதிப்படுத்தப்பட்டது அல்ல ஆகையால்,    பொதுமக்கள் எவ்வித அச்சமுமடைய தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.