März 28, 2024

தொண்டமானாறு கடல் நீரேரியில் சடலம்!

யாழ்.தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டமானாறு நீரேரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலம் ஒன்று இருப்பதாக அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் முதியவர் எனவும் , அவர் தொடர்பிலான தகவல்களை அறிய வில்லை என்றும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.