April 18, 2024

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாவலப்பிட்டியில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.