April 23, 2024

இலங்கையில் மூன்றாவது டோஸ்!

FILE PHOTO: Vials with Pfizer-BioNTech and Moderna coronavirus disease (COVID-19) vaccine labels are seen in this illustration picture taken March 19, 2021. REUTERS/Dado Ruvic/Illustration

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து வழங்கப்படும் என அவர் கூறினார்.

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் முதலாம் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் வரையறுக்கப்படும் எனவும் தாமதிக்காது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.