April 20, 2024

முதுகில் குத்திவிட்டார்கள்!! தூதர்களை திரும்ப அழைத்தது பிரான்ஸ்!!

ஆஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு (ஆக்கஸ் Aukus) எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதர்களை ஆலோசனைக்கு திரும்ப அழைப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது.இந்த ஒப்பந்தம் பிரான்சுடன் ஆஸ்திரேலியா கையெழுத்திட்ட பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை முறியடித்ததால் இந்த நடவடிக்கை பிரான்சைக் கோபப்படுத்தியது.

இக்கூட்டணி ஒப்பந்தத்தால் பிரான்சின் முதுகில் அமெரிக்கா குத்தியுள்ளது என பிரான்சின் வெளியுறவு அமைச்சர் ஜீன் யெவ்ஸ் லே ட்ரியன் வெளிப்படையாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். அத்துடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில் தூதர்கள் திரும்ப அழைக்கப்படுவதாகக் கூறினார்.

ஆக்கஸ் ஒப்பந்தம் நட்பு நாடுகளிடையே ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையை உருவாக்குகிறது. இதன் விளைவுகள் நமது கூட்டணிகள், நமது கூட்டாண்மை மற்றும் ஐரோப்பாவுக்கான இந்தோ-பசிபிக் முக்கியத்துவம் பற்றிய பார்வையை நேரடியாக பாதிக்கும் என்று லுட்ரியன் கூறினார்.

ஆக்கஸ் என அழைக்கப்படும் கூட்டணி, ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கொடுக்கும். குறித்த கூட்டணியின் உருவாக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கடந்த புதன்கிழமை அறிவித்தனர்.

இப்பொதுக் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கூட்டணி குறித்து பிரான்ஸ் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த ஒப்பந்தம் பரவலாகக் கருதப்படுகிறது.

ஒரு வெள்ளை மாளிகையின் அதிகாரி பிடென் நிர்வாகம் இந்த நடவடிக்கைக்கு வருத்தப்படுவதாகவும், வரும் நாட்களில் பிரான்சுடன் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் கருத்துரைக்கையல் பிரான்சில் ஏமாற்றத்தை புரிந்து கொண்டதாகவும், இருதரப்பு உறவுக்கு நாம் கொடுக்கும் மதிப்பை புரிந்துகொள்வதற்கு அந்த நாட்டுடன் இணைந்து பணியாற்றுவோம் என நம்புவதாகவும் கூறினார்.

அமெரிக்கா அவுஸ்ரேலியா தூதர்களை திரும்ப அழைப்பது மிகவும் அசாதாரணமானது. மேலும் பிரான்ஸ் இரு நாடுகளிலிருந்தும் தூதர்களை திரும்ப அழைத்தது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள பிரெஞ்சு இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகளைக் கொண்டாடும் விழாவை ஏற்கனவே இரத்து செய்தனர்.