April 18, 2024

மாவையின் வீடு சென்று அல்வா பொதி!

எவ்வாறேனும் வடக்கின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிடவேண்டுமென மாவை அலைந்து திரிய அவரையும் கைக்குள் கொண்டுவந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புலிகளது போர்க்குற்றங்களை பற்றி சர்வதேச விசாரணை கோரிய சுமந்திரன் அன் கோ தனது அடுத்த வெற்றியாக மாவையினை காலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே ஆரோக்கியமான கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் உட்பட சமகால அரசியல் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக சாணக்கியன் கருத்து தெரிவித்துள்ளார்.