April 20, 2024

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா Dortmund U பகுதியில் அருகாமையில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 5 திகதகளில் (சனி – ஞாயிறு) யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நடைபெறவுள்ளது. டோட்முண்ட் நகரத்தின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள Dortmund U பகுதியில் இம்முறை தெருவிழா நடைபெறுகிறது. தமிழர்கள் கடைகள் அமைந்துள்ள Rheinishe Str ஆரம்பிக்கின்ற பகுதி இதுவாகும்.

 

யேர்மனியில் 60 வீதமானவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட காரணத்தினால், பல்வேறு தளர்வுகள் கொரோனா விதிமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. திறந்த வெளிகளில் நடைபெறுகின்ற விழாக்களுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தடுப்பூசி போடாதவர்களும், கொரோனா பரிசோதனை செய்யாதவர்களும் கூட தமிழர் தெருவிழாவில் கலந்து கொள்ள முடியும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அதே வேளை விழாவிற்கு வருபவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.