April 19, 2024

துயர் பகிர்தல் ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழினி(சூட்டி), அன்புச்செல்வன்(செல்வன்), அன்புச்செல்வி(சிந்தா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, காவேரியம்மா மற்றும் சிறீனிவாசன்(கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா(கொழும்பு), காலஞ்சென்ற மாதவாம்பிகை, ஸ்ரீஜெயராஜா(ஐக்கிய அமெரிக்கா), சாரதாம்பிகை(கனடா), காலஞ்சென்ற யசோதராம்பிகை, ஸ்ரீகணேசராஜா(யாழ்ப்பாணம்), வடிவாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகேந்திரன், Erika, பிரசாத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Sandro, சீதா, அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அன்புச்செல்வன்(செல்வன்) – மகன்