April 19, 2024

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரைப் போற்றுவோம்.

யாழ் போதனா வைத்தியசாலை பணியாளரைப் போற்றுவோம்.
டாக்டர் ம.மலரவன் கண் சத்திரசிகிச்சை வைத்தியர் குழு
கடந்த 28_07_2021 புதன் கிழமை அன்று எனது உறவினர் ஒருவரின் கண் புரை நோய் சத்திரசிகிச்சைக்காக காலை 7.00 மணிக்கு வைத்தியசாலைக்குச் சென்றேன்.உரிய முன்னாயித்தம் செய்தபின் கண் விடுதியில் அனுமதிக்கப்பட்டார். பி.ப 1.30க்கு சத்திரசிகிச்சை ஆரம்பமானது.பி.ப 2.30 மணிக்கு எங்களை வீட்டிற்குச் செல்ல அனுமதி தந்தனர்.நாம் பி.ப3.30 க்கு வீட்டை அடைந்தோம்.
அநேகமானோருக்கு அனைத்து சேவைகளும் இலவசமாக நடைபெற்றன. எங்களின் கண் வில்லையின் வலு உயர்வு ஆகையால் வெளியே விலைக்கு வாங்கினோம்.
டாக்டர் மலரவன் உட்பட அனைத்து பணியாளர்களினதும் அன்பான அரவணைப்பான உறவாடல்களும் எங்களை மகிழ்வித்தது.
இதற்காக நாம் அனைவரனதும் நற்பணியைப் போற்றுவதுடன் எமது உளம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க யாழ் போதனா வைத்தியசாலை!!!