März 29, 2024

77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!

நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசி நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்த தொகுதி தடுப்பூசிகள் வந்தடைந்தவுடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சீனோபோர்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.