April 24, 2024

பூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்! நாசா எச்சரிக்கை

 

இன்று பிற்பகுதியில் இது நமது கிரகத்தின் காந்தப்புலத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உலகெங்கிலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்த புயலின் உள்வரும் எரிப்புகளால் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள செயற்கைக்கோள்களும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜி.பி.எஸ் வழிசெலுத்தல், தொலைபேசி இணைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் டிவியை நேரடியாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 3 ஆம் திகதி இந்த அதிவேக சூரியப் புயல் முதன் முறையாக கண்டறியப்பட்டதுடன், இது வினாடிக்கு 500 கிலோமீற்றர் வேகத்தில் நகர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.