April 19, 2024

மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர் மீண்டும் யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்..!!!

மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் இந்த நியமனத்தை ஜூலை 12 திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சுமார் 10 மாதங்களின் பின்னர் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வை மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கம், தாவூத் லெப்பை அப்துல் மனாப் ஆகிய இருவரும் நாளை திங்கட்கிழமை முதல் முன்னெடுப்பார்கள்.

இதேவேளை, 2018 மே 26ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.