März 28, 2024

துயர் பகிர்தல் அறிவித்தல் திருமதி .கமலாம்பிகை சேது(சேதி)நாதன் புங்குடுதீவு 11

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 3ம்வட்டரத்தில் மணம்புரிந்து கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கமலாம்பிகை (ஆசிரியை) சேதிநாதன் அவர்கள் 10: 07: 2021 சனிக்கிழமை மாலை கனடாவில் இறைபதம் அடைந்துவிட்டார்

காலஞ்சென்றவர்களான. திரு.திருமதி.சின்னப்பா பூரணம் தம்பதிகளின் அருமை மகளாரும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சன்முகம் சிவகாமி தம்பதியினரின் அன்பு மருமகளும் புங்குடுதீவு 3ம்வட்டாரம் காலஞ்சென்ற இலங்கை துறைமுக கூட்டுத்தாபன பிரதமலிகிதர் சேதிநாதன் அவர்களின் அருமை மனைவியும் சிவா(Photo)சிவகலா, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார் இறுதிநிகழ்வுகள் பற்றிய விபரம் அறிய லங்காசிறியை பார்வையிடவும்

அன்னை அவர்கள் புகழோடு தோன்றி தனது பிறந்தநாளிலே தனது கணவர் மறைந்த அதே தினத்தில் இறைவன் திருவடிகளை சென்றடைந்துள்ளாரென்பதை தெரிவித்து தாய்க்குலத்தில் தங்கமாய் வந்துதித்து

அருமையான

பண்புகள் நிறைந்திட்டவரின் இனிய நல் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்!