März 28, 2024

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விபரீத முடிவு!

திருமண பந்தத்தில் இணையவிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இராமாவில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி.கஜேன் (28) என்பவரே நேற்றிரவு அகால மரணமடைந்துள்ளார்.

அண்மைக் காலங்களில் இளைஞர், யுவதிகள் இவ்வாறான முடிவுகள் எடுப்பது அதிகரித்துள்ளது. சிதைந்து போயுள்ள எமது இனத்திற்கு இது மிகப் பெரும் சாபக்கேடு  என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.