April 25, 2024

பார்வை இழந்த மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசியால் மீண்டும் கண் பார்வை கிடைத்த அதிசயம்!

மும்பையில் கண் பார்வையை இழந்த மூதாட்டிக்கு கொரனோ தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை மீண்டும் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனோ பாதிப்பிலிருந்து மக்கள் நம்மைக் காத்துக் கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் தடுப்பூசி என்று சொன்னாலே தெறித்து ஓடினார்கள். தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுவோம் என்று ஓடிய மக்கள், தற்போது தடுப்பூசியின் அத்தியாவசியத்தை புரிந்து கொண்டு, வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள்.

பொதுவாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட, பக்க விளைவுகள் வருவது வழக்கம். அப்படி பொதுவான பக்க விளைவுகளையே தடுப்பூசி ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பாதிப்பும் தடுப்பூசியால் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான கண் பார்வை இழந்த மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை வந்த சம்பவம் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மூதாட்டிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டதால்,

இரு கண்பார்வையை அவர் இழந்தார். இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்தார். ஆனால்,கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அப்பகுதி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். அதனால், இந்த மூதாட்டி தயங்காமல் சென்று கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அப்போது, இரு கண்ணிலும் முற்றிலுமாக பார்வையை இழந்திருந்த மூதாட்டிக்கு தடுப்பூசி போட்டவுடன் கண்பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதால் மூதாட்டி மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.