April 24, 2024

யூரோ-2020 உதைப்பந்தாட்ட போட்டிகளில் இன்று அரையிறுதியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன

இன்று யூலை 7ம் திகதியன்று நடைபெறும் , யூரோ-2020 உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளினட அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதே வேளை நேற்று செவ்வாய்கிழமையன்று இலண்டனில் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டு அணியை வீழ்த்தி இத்தாலி இறுதிப் போட்டிக்குள் செல்ல தகுதி பெற்றுள்ளது.

இன்று இங்கிலாந்தில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் இங்கிலாந்து அல்லது டென்மார்க் அணிகளில் ஒன்று சில நாட்களில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இத்தாலி அணியுடன் மோதவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

16 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.

இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி, 6 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80 ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.

இறுதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2020 யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது.