März 28, 2024

யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தியில் பொருத்தப்பட்ட சமிக்கை விளக்குகள் நேற்று முன்தினம் (05) முதல் செயற்படத் தொடகியுள்ளன.

பருத்தித்துறை வீதி கொடிகாமம் கச்சாய் வீதி ஆகியன ஏ9 வீதியில் இணையும் கொடிகாமச் சந்திப் பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதையடுத்து தென்மராட்சி பிரதேச மக்கள் கொடிகாமம் வர்த்தக சங்கத்தினர் சாவகச்சேரி பிரதேசசபை ஆகியோர் இணைந்து கொடிகாமச் சந்தியில் வீதிச் சமிக்கை விளக்கு பொருத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் விடுத்த கோரிக்கையின் பயனாக குறித்த சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குறித்த சமிக்கை விளக்கு தொகுதி 90 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்பு இருந்ததை விட தற்போது கொடிகாமம் சந்தியில் பாதசாரிகள் நடைபாதை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள மாவட்டமாக யாழ்.மாவட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.