März 29, 2024

ஜேர்மனி சில நாடுகளின் பயணத் தடை நீக்கம்.

பிரித்தானியா, இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல் முதலான நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீதான பயணத் தடை நாளை (புதன்கிழமை) முதல் நீக்கப்படுவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இந்த தடை நீக்கத்தால், ஜேர்மானிய குடிமக்கள் மற்றும் வாழிட உரிமம் கொண்டவர்கள் மட்டுமல்லாது அனைவருமே ஜேர்மனிக்கு வரலாம். ஒரே ஒரு விடயம், அவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சோதனைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் அவ்வளவுதான்.

முன்பு ஜேர்மனி திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அதிகம் காணப்படும் நாட்டு மக்கள் ஜேர்மனி வர தடைவிதித்திருந்தது.

ஆனால், ஜேர்மனியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வருவோரை ஜேர்மனிக்குள் அனுமதிக்கலாம் என்று ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.