April 19, 2024

துரைராஐா ஜெயகுமார் அவர்கள் சுவிஸ் செங்காலன் நகரசபையின் பாராளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

 துரைராஐா ஜெயகுமார் அவர்கள் சுவிஸ் நாட்டில் முப்பது ஆண்டுகளாக வாழ்கின்றார்.பொதுச்சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றிவரும் ஜெயகுமார் ஓர் தாதியாக வைத்தியசாலையில் முழுநேரமாக பணியாற்றுகின்றார்.
சுவிஸ் பசுமைக்கட்சியின் உறுப்பினராக இணைந்து் பன்னாட்டு சமூக மக்களின் நன்மதிப்போடு வாழ்ந்து வருகின்றார்.இம்முறை நடைபெற்ற செங்காலன் நகரசபை பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு
3558 வாக்குகளைப்பெற்று வெற்றியடைந்துள்ளார்.முதல் தேர்தலில்1800 வாக்குகளும் இரண்டாவது தேர்தலில் 2600 வாக்குகளையும் பெற்று இம்முறை
அதிகபடியான 3558
வாக்குகளைப்பெற்று மீண்டும் செங்காலன் நகரசபையின் பாராளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.வாழ்த்துகள்.