பள்ளிகுடாவில் குடியேற அழைப்பு?

பூநகரி பள்ளிக்குடாவில் அடையாளம் காணப்பட்டுள்ள முஸ்லிம்களது காணிகளில்  தற்காலிக குடிசையினை அமைத்து உடனடியாக குடியிருக்க ஆயத்தமாக இருக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணி இதுவரையில் அடையாளப் படுத்தப்படவில்லையாயின் காணி தொடர்பாக தங்களிடம் இருக்கும் ஏதேனும் ஆதாரங்கள், குறிப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள காணி உரிமையாளர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காணியைப் பெற்று அங்கு குடியேறி பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்த தயாராக இருந்தால் மாத்திரமே வீட்டிற்கும் வாழ்வாதார உதவிக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.