April 25, 2024

துபாயில் செப்ரெம்பர் 19ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் கிறிக்கட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ள சென்னை சுப்பர் கிங் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கோவிட்-19 கொறோனா தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். ஏனினும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார் என்று கூறப்படுகிறது.

 

கடந்த 21ம் நாள் துபாய் சென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினருக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட 3 கட்ட பரிசோதனைகளில் இதுவரை 13 பேருக்கு தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்ரெம்பர் 01ம் நாள் வரை அந்த அணியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

எனினும் இத்தொடரில் விளையாடவுள்ள ஏனைய அணிகள் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.