April 23, 2024

“அரசியலில் இருந்து உடனே விலகுவேன்” – விக்னேஸ்வரன் சவால்

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தால் தான் அரசியலில் இருந்து உடனே விலகுவதாகவும் குறிப்பிட்டார்.

இல்லைனில் எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விக்னேஸ்வரன்,

தமிழர்களுக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள் என்றும் தாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம் என்றும் கூறினார்.