April 23, 2024

தொல்பொருள் செயலணி! மேலும் 4 தேரர்கள்!

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து – அஸ்கிரி பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 4 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுனே சுமங்கல தேரர் மற்றும் அம்பன்வெல்லே ஶ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.