März 28, 2024

சி.வி.பேச்சு: சீறுகின்றார் சிவாஜி?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ

வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால், எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் பாட்டில் செல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி தொன்மையான மொழி. லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது. செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அது  மூத்த குடிமக்களினுடைய தமிழ்மொழி என உரையாற்றியதும் கூக்குரலிடுவதும் நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஓர் ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.