April 18, 2024

காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!

 தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட

காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும் எமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், தாயகத்தில் நடைபெறுகின்ற தொடர் மக்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சுவிசில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 31.08.2020 அன்று நடைபெறுகின்றது இவ் ஒன்றுகூடலிற்கு அனைவரையும் அழைக்கிறது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.