März 29, 2024

வாய் திறக்கிறார் மணி?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து

நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை நாளை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார்.

கட்சியின் மத்தியகுழுவினால் அனுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களிற்கான தனது விளக்கத்தை கடிதமாக கட்சி தலைமைக்கு இன்று அனுப்பியுள்ளார்.

நாளை செய்தியாளர்களிடம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார். அனேகமாக கட்சிக்குள் தொடர்ந்து செயற்படுவேன் என்பதையே அவர் அறிவிப்பார் என தெரிகிறது