März 29, 2024

துயர் பகிர்தல் திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்

திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர் ஸ்கந்தவரோதயா கல்லூரி சுன்னாகம், ஓய்வுபெற்ற அதிபர் விக்டோரியா கல்லூரி சுழிபுரம்)

பொன்னம்பலம் செல்வரத்தினம்

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1939 – மறைவு: 18 ஆகஸ்ட் 2020

யாழ். சுழிபுரம் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பக்கஸ் லேன், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார்.
அன்னார்,  காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், 
காலஞ்சென்ற திரு.திருமதி ராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலலோஷனி(ஓய்வுபெற்ற ஆசிரியை மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி(கணக்காளர்- Jo Lanka) அவர்களின்  அன்புத் தந்தையும்,
ஜெயராம்(பொறியியலாளர்- Luminex Pvt Ltd) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், கனகரத்தினம்(மானிப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான  தர்மரட்ணம், ஜெயசீலரட்ணம் மற்றும் சந்திரவதனா(ராணி- பிரித்தானியா), ரஞ்சிதமலர்(கனடா), சிறிஸ்கந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- ஜெயராம்(மருமகன்)
Address:-
25 Nelson Place, Wellawatta, Colombo, Sri Lanka
தொடர்புகளுக்கு:-
ஜெயராம் – மருமகன் Mobile : +94 76 124 8336   
அபிராமி – மகள் Mobile : +94 77 618 4671