März 29, 2024

தயாரிப்பாளர்களுக்கு தண்னி காட்டி வரும் நடிகை நயன்தாரா?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பின் இந்த நிலைக்கு பல கஷ்டங்களை சந்தித்து முன்னேறியிருக்கிறார்.

தற்போது தயாரிப்பாளர்களே இந்த நடிகை தான் இதற்கு சரிப்பட்டு வரும் என்று கூறி சம்பளத்தை கோடிகளில் பேசி மார்க்கெட்டினை இழுத்து வருகிறார்கள். இதனால் ஓவராக சீன் போடுகிறார் நயன் தாரா என்று தயாரிப்பாளர்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்களாம்.

இதற்கு காரணம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாததுதானாம். ஆரம்ப காலத்தில் தன்னுடைய தனிப்பட்ட புரமோஷனுக்காக கலந்து கொண்டு வந்த நயன் அதை படிபடியாக குறைத்து கொண்டு தற்போது படங்களில் நடிப்பதை மட்டுமே வேலையாக வைத்து 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.

இதற்கு நயன் தாரா கூறும் காரணம், ‘புரமோஷனுக்கு நான் வந்த படங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளாராம் நயன்தாரா.

ஆனால் இதை மறுத்து நயன் தாரா கலந்து கொண்ட படங்கள் பெரும் வெற்றியையும் பெற்றுள்ளது என்றும் சொந்த தயாரிப்பு, நண்பர்கள் படத்தில் மட்டும் கலந்து கொள்கிறார். இதை நினைவு படுத்தி கோபத்தில், உங்களுக்கு 6 கோடி சம்பளம் கொடுத்து உங்கள் பின்னாடியே சுற்றவேண்டுமா நீங்கள் தயாரிக்கும் படங்கலுக்கே செல்லுங்கள் என்று சாடி வருகிறார்களாம்.

இதை கேள்விப்பட்ட நயன் தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்களுக்கு கால் செய்து, நான் வருவது என்றால் நயன் தாரா வருவார்கள் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளாராம் விக்னேஷ்.