April 19, 2024

அமெரிக்க பாணியில் இலங்கையில் அமைக்கப்படும் நவீன சிறைச்சாலை!

அமெரிக்க பாணியில் இலங்கையில் அமைக்கப்படும் நவீன சிறைச்சாலை!

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கும்பல் தலைவர்களை தடுத்து வைக்க அமெரிக்கா பாணியில் உயர்தொழில்நுட்ப சிறைச்சாலையை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறைச்சாலையை நிர்வகிக்க சிறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மறைகணிணி மற்றும் கையடக்க தொலைபேசிகளை முடக்கும் ஜாமர் அமைப்புகளும் இடம்பெறும்.

அமெரிக்காவின் ‘அல்காட்ராஸ்’ சிறைச்சாலை கைதிகளை வெளியுலக தொடர்பில்லாமல் அடைப்பதில் புகழ்பெற்றது. கைதிகள் தப்பிக்க முடியாத வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வீரவில பகுதியில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த சிறையில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கும்பல் தலைவர்களை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களை தடுத்து வைத்தால், கைதிகள் வெளிப்புற குற்றச்செயல்களுடன் ஈடுபட முடியாதென அதிகாரிகள் நம்புகிறார்கள்.