März 29, 2024

முன்னணியின் கடிதத்திற்காக திறக்கப்படுமா தபாலகம்?

இலங்கையில் ஞாயிறு விடுமுறை நாளாக இருந்த போதும் முன்னணியின் பதிவு கடிதத்தை பெற தபாலகங்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை இன்று அவருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைப்போம். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என முள்ளிவாய்க்காலில் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்.

பின்னர் ஊடகவியலாளர்கள் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்த அவர்களை முற்றுகையிட்டனர்.

13ஆம் திகதி இரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும்.

அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.

எனினும், கடைசிவரை மணிவண்ணன் மீது ஏன் ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்தோம் என்பதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இதனிடையே இலங்கையில் தபாலகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் ஞாயிறு விடுமுறையாகும்.