April 20, 2024

அங்கயனிற்கு அல்வா: டக்ளஸிற்கு மீண்டும் மீன்பிடி?

கோடிகளில் அள்ளிக்கொட்டி வெற்றி பெற்ற அங்கயன் இராமநாதனிற்கு கடைசியில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பதவியே எஞ்சியுள்ளது.

கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் பதவியேற்பு நிகழ்வில் இதனிடையே கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மீண்டும் கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றுள்ளார்.

அதே வேளை முதன்முதலாக ஈபிடிபியில் வன்னிக்கு தெரிவாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இன்னொருபுறம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.