April 19, 2024

செப்டம்பர் முதல் பாடசாலைகள் – போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:-

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல.

பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி முடக்கநிலை கடைப்பிடிக்கப்பட்டாலும் பாடசாலைகள் மூடல் என்பது கடைசி கடைசித் தெரிவாக இருக்கும்.

மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாடசாலைகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.