April 19, 2024

கோட்டாபயவுக்கு பயந்து மஹிந்த வீட்டில் குவிந்துள்ள பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

கோட்டாபயவுக்கு பயந்து மஹிந்த வீட்டில் குவிந்துள்ள பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தமக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோரி பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இம்முறை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிய அளவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பிரதமரிடம் அமைச்சு பதவி கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளமையினால் அவரிடம் இது தொடர்பான கோரிக்கைகள் விடுவதற்கு அச்சமடைந்த உறுப்பினர்கள் பிரதமரை நாடியுள்ளனர்.

இதனால் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு முறையில் விருப்பமான அமைச்சசு பதவிகளை கேட்பதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுளமன்றத்திற்கு தெரிவாகிய 150 பேரில் 100 பேர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரிடியாகவும், அவரின் குடும்ப உறுப்பினருக்கும் நெருக்கமான நபர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளைய தினம் அமைச்சரவை பதவி பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.