April 25, 2024

ஸ்ரீலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவு!

ஸ்ரீலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்கு 8 பெண்கள் தெரிவுசெய்யபட்டுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலில் 59 பெண்கள்; போட்டியிட்டபோதும் அதில் 8பேரே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

30 வீத பெண் பிரதிநிதித்துவம் கோரப்படுகின்ற நிலையில் 2015ஆம் ஆண்டு 12பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். இது 5.8வீத பிரதிநிதித்துவத்தை பிரதிபலித்தது.

இந்தமுறை அதிலும்; குறைவு ஏற்பட்டுள்ள. அத்துடன் இந்த முறை நாடாளுமன்றத்துக்கான தமிழ் பெண்களின் பிரதிநிதித்துவம் எதுவும் இல்லை.

இந்தநிலையில் கம்பஹாவில் இருந்து பொதுஜன பெரமுனவின் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே, கோகிலா ஹர்சினி, மாத்தளையில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹனி குமாரி கவிரட்ன, காலியில் இருந்து பொதுஜன பெரமுனவின் கீதா குமாரசிங்க.

இரத்தினபுரியில் இருந்து பொதுஜன பெரமுனவின் சார்பில் பவித்ரா வன்னியாராச்சி, முதித்தா பிரியதர்சினி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தலதா அத்துகோரள, கேகாலையில் இருந்து பொதுஜன பெரமுனவின்; ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு செல்கின்றனர்.