März 28, 2024

சுத்துமாத்து :சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டார்?

இறுதி நேர தேர்தல் மோசடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் வெல்ல வைக்கப்பட்டுள்ளார்.இதற்கெதிராக யாழ்.மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்பள் மீது பொலிஸ் தடியடி நடத்தியுள்ளது.மாவையின் மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வெற்றி பெற்றதாக கருதப்பட்ட சசிகலா 700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கண்ணீர் மல்க வெளியேறியுள்ளார்.
இதனிடையே தேர்தலில் முறைகேட்டின் மூலம் வெற்றி பெற்ற சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்க சீ.வி.கேயிடம் சவால் விடுத்த கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தொடர்ந்தும் கோசமெழுப்பியவாறு உள்ளனர்.