März 29, 2024

சசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது!

கூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள்  மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொடுத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வேட்பு மனு தாக்கல் செய்கையில், கட்சித்தலைமைக்கு பிரச்சினை வந்தால், பாவிப்பதற்கென ஒரு ராஜினாமா கடிதம் வாங்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தை கொண்டு போய் சயந்தன் தேர்தல் ஆணையாளரிடம் கொடுத்து திருமதி சசிகலா ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால் திருமதி சசிகலா , தேர்தல் ஆணையாளரிடம் அந்த கடிதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என மறுதலித்து இருக்கிறார். இப்போது சசிகலாவை சூழ்ந்து நின்று எம்.ஏ.சுமந்திரன் தரப்பு கடும் அழுத்தம் கொடுக்கின்றன என தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இதனிடையே சசிகலா ரவிராஜ்ஜிற்கு நீதி கிடைக்க தலையிடுமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடமிருந்து கோரிக்கை சென்றுள்ளது.