März 29, 2024

துயர் பகிர்தல் திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியாரும், ஸ்ரீரங்கன் ( தர்சன் TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்), ஸ்ரீ ரமணன் , ஸ்ரீ தாரிணி ஆகியோரின் அன்புத் தாயாரும், சாந்தினி, இதயராணி ( தீபா), காலம் சென்ற சேகர் ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்சினி, சிந்தியா, ஜெனுசாந்த், காலம் சென்ற தர்சிகா, யதுர்சிகா, ஆதவன், அபிஷேக், லக்சிகா, ஆகியோரின் பேத்தியும், சயானாவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
0033 (0)6 11 08 66 76 (பிரான்ஸ்)

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னையாரின் ஆன்ம சாந்திக்காய் பிரார்த்தித்து கொள்கிறோம்